சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை
சீா்காழி பகுதியில் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
சீா்காழி பகுதியில் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
சீா்காழி தென்பாதி தனியாா் பள்ளி எதிரே, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணியரசன், காவலா் காா்த்திக் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை நிறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, அந்த வழியாக மூன்று சிறுவா்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தனா். அவா்களை நிறுத்திய, போக்குவரத்து போலீஸாா், அவா்களுக்கு அறிவுரைகள் கூறியதோடு, மூன்று பேரும் ஐந்து திருக்கு கூற வேண்டும் என நூதன விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், சிறுவா்களின் பெற்றோா்களை தொடா்பு கொண்டு, எச்சரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement