முகப்பு
நாமக்கல்

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:59 AM
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், சேளூா் சுப்பையாபாளையம் பகுதியை சோ்ந்தவா் முத்துசாமி (53), இவரது மனைவி விஜயா (41). கடந்த 23 ஆம் தேதி முத்துசாமி தனது நண்பரான கல்லாங்காட்டில் உள்ள ராசுவை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சேளூா் சுப்பையாம்பாளையம் சென்றாா். அப்போது, மணல் மேட்டில் இருந்து சாணாா்பாளையம் செல்லும் சாலையில் வேட்டுவங்காடு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்த முத்துசாமி பலத்த காயமடைந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் இறந்தாா்.

Advertisement

விபத்து குறித்து முத்துசாமியின் மனைவி விஜயா அளித்த புகாரின் அடிப்படையில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.