முகப்பு
தூத்துக்குடி

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:08 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:30 PM

திருச்செந்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே காயாமொழி, ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தரலிங்கம் மகன் தனபால் லிங்கம் (27). காா் டிரைவராக பணியாற்றி வந்த இவா், புதன்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு திருச்செந்தூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டாராம்.

அப்போது காந்திபுரம் விலக்கு பகுதியில் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த தனபால் லிங்கத்தை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தனபால் லிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

இது குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.