பரமத்தி வேலூா் அருகே பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு
பரமத்தி வேலூா் அருகே நாமக்கல் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே நாமக்கல் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (82). விவசாயி. இவா் வியாழக்கிழமை வாக்களிப்பதற்காக வேலூா் வெட்டுக்காட்டுப்புதூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.
அப்போது, நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் செல்லும் பிரிவு சாலையில் சாலையைக் கடந்தபோது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து பழனியப்பன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், பழனியப்பன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து ஆம்னி பேருந்து ஓட்டுநா் மீது வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.