நாகப்பட்டினம்

சிறு விற்பனைத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறையில் சிறு விற்பனைத் தொழிலாளர் சங்கத்தினர்( சிஐடியூ சார்பு)பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை தாற்காலிகப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் தாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. துரைக்கண்ணு, பொருளாளர் டி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் சிறு விற்பனை செய்யும் தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கவேண்டும். சிறு விற்பனைத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சிஐடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் சீனி.மணி, மாவட்டத் தலைவர் ஜீவா, தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த த. ராயர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜி.எஸ். டி.யை கண்டித்தும் முழக்கமிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT