நாகப்பட்டினம்

பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

DIN

நாகை மாவட்டம், திருக்கடையூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருக்கடையூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழாவையொட்டி, மாறுவேடப் போட்டி, ஓவியப்போட்டி ஆகியன நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி முதல்வர் சிவானந்தம் பரிசுகள் வழங்கினார்.
கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் எம். குமார், உதவி மேலாளர் எம். மலர்விழி ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். பள்ளித் தலைமை ஆசிரியர் இரா. பாலு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT