நாகப்பட்டினம்

அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு அமாவாசை வழிபாடு

DIN

தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆஞ்சநேயர் 10 கரங்களுடன், பத்துவித ஆயுதங்கள் ஏந்தி, நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறார். அனுமன் தலமான இங்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, விளம்பி தமிழ்ப் புத்தாண்டு முதல் அமாவாசையையொட்டி, உத்ஸவர் ஆஞ்சநேயர் சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருளச்செய்து, சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT