முகப்பு
நாகப்பட்டினம்

காவிரி: விடியோ, போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:52 am IST
பகிர்:

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மயிலாடுதுறை வட்ட விடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சங்க வட்டத் தலைவர் லேனா. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, திராவிடர் கழக நாகை மாவட்டச் செயலர் கி. தளபதிராஜ் தொடங்கி வைத்தார். இதில், சங்க மாவட்டத் தலைவர் எஸ். குமார், சரவணன், நாகை மாவட்ட உழவர் பேரியக்கத் தலைவர் பாண்டுரெங்கன், நிர்வாகி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.