நாகூரில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
சிறுமி ஆஷிபா மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி நாகூர் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறுமி ஆஷிபா மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி நாகூர் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவின் மரணத்துக்கு உரிய நீதி வழங்க வேண்டும், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. நிர்வாகி மைதீன் நகுதா தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சுல்தான் கலிபா, அனஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, சிறுமியின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.