மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் பால்குட வழிபாடு
சீர்காழி மாணிக்கநாச்சியம்மன் கோயில் உத்ஸவத்தையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தனர்.
சீர்காழி மாணிக்கநாச்சியம்மன் கோயில் உத்ஸவத்தையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தனர்.
சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள மாணிக்கநாச்சியம்மன் கோயிலில், வருடாந்திர சித்திரை உத்ஸவம் தொடங்கியுள்ளது. இதையொட்டி, நாகேசுவரமுடையார் கோயிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், திரவியப் பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.