மணிப்பூர் புதிய டிஜிபி ஜூன் 1இல் பொறுப்பேற்பு
மணிப்பூர் காவல் துறையின் புதிய டிஜிபி ஜூன் 1-ஆம் தேதி பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் காவல் துறையின் புதிய டிஜிபியான முகேஷ் சிங் ஜூன் 1-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
மணிப்பூர் காவல் துறையின் புதிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங் சனிக்கிழமை மணிப்பூர் தலைநகர் இம்பால் வந்தடைந்தார். அவர், ஜூன் 1-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புது தில்லியிலிருந்து வந்திறங்கிய சிங்கை, இம்பால் விமான நிலையத்தில் மூத்த காவல் துறை அதிகாரிகள் வரவேற்றனர். 1996-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான முகேஷ் சிங், இதற்கு முன்பு லடாக்கின் காவல் துறைத் தலைவராகப் பணியாற்றி உள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே டிஜிபியாக இருக்கும் ராஜீவ் சிங்கின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத்தொடர்ந்து புதிய டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ராஜீவ் சிங் புது தில்லியில் உள்ள அமைச்சரவை செயலகத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்ற மத்திய அரசால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.