நாகை மாவட்டம், சீர்காழி புத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், நூற்றாண்டுகால பழைமைவாய்ந்த அரச மரம் திங்கள்கிழமை இரவு வேரோடு சாய்ந்தது.
சீர்காழி பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது, புத்தூரிலிருந்து வடரெங்கம் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில், கடுக்காமரம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அருகிலிருந்த மின் கம்பமும், பேருந்து நிறுத்தமும் சேதமடைந்தன.
ஊர் பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர். இதனால், புத்தூரிலிருந்து வடரெங்கம் செல்லும் சாலையில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.