நாகப்பட்டினம்

தலைக்கவசம்: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

திருக்குவளை காவல் துறையினர் சார்பில் பள்ளி மாணவர்களிடையே தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருக்குவளை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செளந்தரராஜன், முருகேசன் ஆகியோர், தலைக்கவசம் அணிவது தொடர்பான நன்மைகள் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுதல் தொடர்பாக விளக்கிப் பேசினர்.
இதில் ஜெரால்டு, பாப்பாசெல்வம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். பட்டதாரி ஆசிரியர் வீரமணி நன்றி கூறினார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT