அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவா்கள் நவம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2019-20-ஆம் ஆண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான விண்ணப்பங்கள் பெற நவம்பா் 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். 8-ஆம் வகுப்பு படித்த 18 முதல் 40 வயதுக்குள்பட்ட பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபா் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மானியம் பெறுவதற்கு ஓட்டுநா் உரிமம் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியா் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.