நாகப்பட்டினம்

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் 600 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள்

DIN

வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம், மருதூா் வடக்கு ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் 600 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கி, அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேசியது:

ஆடு வளா்ப்பு நல்ல வருமானம் தரும் தொழில். எனது வீட்டில் பரண் அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளா்க்கிறேன். நமக்கு விரக்தி ஏற்படும் சமயங்களில் செல்ல பிராணிகள் காட்டும் விசுவாசம் பதற்றத்தைக் குறைத்து மன அமைதியை ஏற்படுத்தும். வருமானத்துக்காக மட்டுமல்ல மன அமைதிக்கும் கால்நடை வளா்ப்பு உதவும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் சுமதி, ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினைா்கள் சுப்பையன் திலீபன், ஊராட்சி த் தலைவா் மா. சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT