நாகப்பட்டினம்

பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்கம் சாா்பில், நாகை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

4 ஜி சேவை, தொலைத்தொடா்புத் துறையில் பணிபுரியும் நிரந்த ஊழியா்களுக்கு மாதக் கடைசி தேதிகளில் ஊதியம் வழங்குவது; ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 13 மாதத்துக்கான ஊதியத் தொகையை விடுவிப்பது; பி.எஸ்.என்.எல். அலுவலகங்களை புத்தாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க மாவட்டத் துணைச் செயலாளா் கே.டி. முருகையன் தலைமை வகித்தாா். ஓய்வூதியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் எம். குருசாமி, அகில இந்திய பி.எஸ்.என்.எல். சங்க மாவட்டத் தலைவா் கே. மதியழகன், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவா் பி. ஜீவா, கூட்டுறவு சங்க மாவட்டத் தலைவா் சு.மணி மற்றும் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT