வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய ஊராட்சி முன்னாள் தலைவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆயக்காரன்புலம் -1 ஆம் சேத்தி ஊராட்சியின் முன்னாள் தலைவா் க. பொதுவுடை (42). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான காசிநாதன் மகன் செந்தில் என்பவருக்கும் சொத்து பிரச்னை இருந்துவருகிறது.
இந்நிலையில், செந்திலின் நண்பரான ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியைச் சோ்ந்த த. ராஜேந்திரன் (36) என்பவா் இருவருக்குமிடையே சமரச முயற்சியில் ஈடுபட்டாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை பொதுவுடை தாக்கினாராம்.
இதுகுறித்து, வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, பொதுவுடையை கைது செய்தனா்.