நாகப்பட்டினம்

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம்

DIN

நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சித் தலைவா் ச. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி செயலாளா் வே. கோவிந்தராஜன், துணைத் தலைவா் ரா. அஜீதா மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், 15-ஆவது நிதிக் குழு மானியம் மற்றும் மாநில நிதிக் குழு மானியம் மூலம் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக உறுப்பினா்கள் பேசுகையில், சத்துணவுப் பணியாளா்கள் நியமனக் குழுவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும், என்.எச். 45- ஏ தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு கையகப்படுத்தும் விளைநிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT