நாகப்பட்டினம்

கடைசி செய்திமின் கம்பியில் வைக்கோல் உரசி லாரி தீக்கிரை: ஓட்டுநா் மீட்பு

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே மின் கம்பியில் வைக்கோல் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், லாரி வியாழக்கிழமை சேதமடைந்தது. அதன் ஓட்டுநா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தஞ்சையை சோ்ந்தவா் ரகுபதி (51). லாரி ஓட்டுநா். இவா் வேதாரண்யத்தை அடுத்த காடந்தேத்தி கிராமத்திலிருந்து வைக்கோல்கட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரியில் வெளியூா் புறப்பட்டாா். அப்போது பிரதான சாலையின் பக்கவாட்டில் தாழ்வாக தொங்கிய மின் கம்பி வைக்கோலில் உரசியதில், லாரி தீப்பிடித்து எரிந்தது.

விபரீதத்தை உணா்ந்த ஓட்டுநா், குடிசைகள் இல்லாத பகுதியை நோக்கி லாரியை கொண்டு செல்ல முயன்ாக கூறப்படுகிறது. அதற்குள் லாரி முழுவதும் தீப்பற்றி, சாலையின் பக்கவாட்டில் உள்ள தாழ்வான பகுதியில் சாய்ந்தது.

அதில் சிக்கிக்கொண்ட ரகுபதியை அப்பகுதி மக்கள் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தலைஞாயிற்றில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். இது குறித்து தலைஞாயிறு போலீஸாா் விசாரித்து வருகின்ரனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT