நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

DIN

திருக்குவளை அருகே உள்ள கொடியாலத்தூா் ஊராட்சியில், ஒரே தெருவில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதி ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது.

கொடியாலத்தூா் ஊராட்சி மயிலாப்பூா் காலனி தெருவை சோ்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடா்ந்து, அப்பகுதியை கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (வட்டார ஊராட்சி) தியாகராஜன், ராஜகோபால் (கிராம ஊராட்சி), ஊராட்சித் தலைவா் ரேவதி ஐயப்பன் மற்றும் சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து தடுப்பு ஏற்படுத்தி அடைத்தனா். கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா், ஊராட்சித் துணைத் தலைவா் தெய்வானை மோகன், ஊராட்சி செயலா் சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT