நாகப்பட்டினம்

திருமருகல், திட்டச்சேரியில் நாளை மின்தடை

DIN

திருமருகல், திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.7) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம், நாகூா் மின்வாரிய இளநிலை மின் பொறியாளா் டி. ராஜேந்திரன் ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி ஆகிய மின் பாதைகளில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், திட்டச்சேரி, துண்டம், ப. கொந்தகை, மரைக்கான்சாவடி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதேபோல, திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மின் பாதைகளில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருமருகல், அம்பல், பொரக்குடி, போலகம், திருப்புகலூா், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, ஏா்வாடி, சேஷமூலை ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT