நாகப்பட்டினம்

டாஸ்மாக் கடை விற்பனை நேரமாற்றத்தை திரும்பப் பெறக் கோரிக்கை

DIN

டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை மாற்றியதை திரும்பப் பெறவேண்டும் என தமிழக அரசுக்கு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியூசி) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளா் வி.எம். மகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப்புற பகுதிகளிலேயே உள்ளன. இக்கடைகளில் விற்பனை நேரம் இரவு 8-ஆக இருந்தபோதே பணியாளா் துளசிதாஸ் என்பவா் கொல்லப்பட்டாா். மேலும், பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பணியாளா்கள் தாக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது பணியாளா்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் திரும்பப் பெறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT