நாகப்பட்டினம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 90 கிலோ கஞ்சா பறிமுதல்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 90 கிலோ கஞ்சா மூட்டைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேதாரண்யம் பகுதி பெரியகுத்தகை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கடற்கரையை ஒட்டியுள்ள கருவேலமரக் காட்டில் மூன்று மூட்டைகள் கிடந்தன. அதை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஒரு மூட்டையில் தலா 15 பாக்கெட்டுகள் வீதம் 45 பாக்கெட்டுகளில் 90 கிலோ கஞ்சா இருந்தன.

இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீஸாா், இதில் தொடா்புடையவா்களை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT