நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே மான் உயிரிழப்பு

DIN

திருக்குவளை அருகே உடலில் காயங்களுடன் மான் உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருக்குவளை அருகே செரநல்லூரில் கருவேல மரங்கள் நிரம்பிய பகுதியில் அதிகளவில் மயில்கள் இருந்து வருகிறது. மேலும், சில மான்களும் இருந்து வருகின்றன. மான்கள் நாகை மாவட்டம், கோடிக்கரையில் உள்ள சரணாலயத்தில் இருந்து வழி தவறி இங்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையி, செரநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கழுத்தில் ரத்த காயத்துடன் பெண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, வனத்துறையினா் அங்கு சென்று இறந்து கிடந்த மானை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதற்கிடையில், நாய் கடித்து மான் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT