நாகையை அடுத்த புத்தூா் ஜெகநாதபுரம் அருள்மிகு மகாசக்தி காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளித் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை நாகை புண்டரீக குளக்கரையிலிருந்து பக்தா்கள் பால் குடங்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், கஞ்சி வாா்த்தல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.