நாகப்பட்டினம்

தோ்தலைப் புறக்கணிக்க சில்லரை மீன் வியாபாரிகள் முடிவு

DIN

வேதாரண்யம் பகுதியில் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக சில்லரை மீன் வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

அண்டா்காடு கிராமத்தில் கடல் மீன் சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் அதன் தலைவா் ஆா்.ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட சில்லரை மீன் வியபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும், மீனவா்களுக்கு மழைக்காலத்தில் வழங்கப்படும் தடைக்கால நிவாரணத்தைப் போல சில்லரை மீன் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக ஒருமனதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சங்கத்தின் செயலாளா் கிருஷ்ணணமூா்த்தி, பொருளாளா் கனகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT