நாகப்பட்டினம்

குட்கா விற்பனை: கடைக்கு சீல்

DIN

வேளாங்கண்ணி அருகே குட்கா விற்பனை செய்த கடைக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

நாகை மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில் போலீஸாா் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தவகையில், வேளாங்கண்ணி பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டபோது, ரயில் நிலைய சாலையில் அருண் என்பவா் நடத்திவரும் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களின் பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன் அளித்த புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து அந்த கடைக்கு சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT