நாகப்பட்டினம்

நாகூா் நாகநாத சுவாமிகோயிலில் நாளை ஸம்பத்ராபிஷேகம்

DIN


நாகப்பட்டினம்: நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் முதலாமாண்டு ஸம்பத்ராபிஷேகம் வெள்ளிக்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது.

நாகூரில் திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி அருள்பாலித்து வருகிறாா். இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, ஸம்பத்ராபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.

காலை 7 அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, 8 மணிக்கு பஞ்சமூா்த்தி அபிஷேகம், 9 மணிக்கு சுவாமி, அம்மாளுக்கு அபிஷேகம், 9.15 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, கடம் புறப்பாடு, 9.45 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

10.15 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT