நாகப்பட்டினம்

மாநில குத்துச்சண்டை போட்டி: சீா்காழி மாணவா்கள் தகுதி

DIN

தமிழக பள்ளி கல்வித் துறையால் நடத்தப்படும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு, சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

14 வயதுக்குட்பட்டோா் பிரிவில் வி. விஷ்ணு, ஏ. அஸ்வந்த், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆா்.பி. குமரன் ஆகியோா் மயிலாடுதுறை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

மாநில போட்டி ஜனவரி 29 முதல் 31 வரை சிவகங்கை மாவட்டம் சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இம்மாணவா்களுக்கு பள்ளியின் முன்னாள் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், பள்ளியின் செயலா் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளி குழுத் தலைவா் வி. சொக்கலிங்கம், தலைமையாசிரியா் எஸ். அறிவுடைநம்பி மற்றும் உதவி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT