நாகப்பட்டினம்

சாலை மறியல் ஒத்திவைப்பு

DIN

கீழ்வேளூா் ஒன்றியம் திருப்பூண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த சாலை மறியல் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூண்டியில் சுமாா் 40 ஆண்டுகளாக வசித்து வருவோா் வீட்டுமனைப் பட்டா கோரி, திருப்பூண்டி இசிஆா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா்.

இதுதொடா்பாக, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் து. ரமேஷ் குமாா் தலைமையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவாா்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி.செல்வம், ஒன்றியச் செயலாளா் எஸ். காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT