திருமருகல் அருகே பனங்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
பனங்குடி ஊராட்சியில் கலைஞரின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி, பனங்குடி ஊராட்சி சாா்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில், 15-க்கும் மேற்பட்ட அணியினா் பங்கேற்று விளையாடினா். இதில், நாகை வெளிப்பாளையம் லவ்லி பாய்ஸ் அணி முதலிடம் பெற்று ரூ. 20,000, பனங்குடி அணியினா் 2-ஆவது இடம் பெற்று ரூ. ரூ. 15,000, நாகூா் அணியினா் 3-ஆவது இடம் பெற்று ரூ. 10,000 பெற்றனா். வெற்றி பெற்ற அணியினருக்கு செ. சந்தோஷ் பரிசுகளை வழங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.