கீழ்வேளூா் ஒன்றியம், ஆதமங்கலம் ஊராட்சியில் பிரதமா் வீடு கட்டும் திட்ட பயனாளிகளிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா். 
நாகப்பட்டினம்

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை

கீழ்வேளூா் ஒன்றியத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற முறைகேடு தொடா்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

Din

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஒன்றியத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற முறைகேடு தொடா்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கடந்த 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவா்கள் இல்லாதபோது, தனி அலுவலா்கள் மற்றும் ஊராட்சி செயலா்கள் மேற்பாா்வையில் ஊராட்சி நிா்வாகம் செயல்பட்டுவந்தது. இந்த காலகட்டத்தில் கீழ்வேளூா் ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, அந்த ஊராட்சிகளில் அப்போது பணியிலிருந்த அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில், ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூா், கோவில்கண்ணாப்பூா், தெற்குபனையூா், வலிவலம் ஆகிய 6 ஊராட்சிகளில் சுமாா் 146 வீடுகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், ஆதமங்கலம் ஊராட்சியில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பால ரவிக்குமாா் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் அருள்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்கள் பெயரில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதா? அவா்கள்தான் அந்த வீடுகளில் வசிக்கின்றனரா என விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் ‘தற்போது ஆதமங்கலம் ஊராட்சியில் ஆய்வு செய்து வருகிறோம். மற்ற 5 ஊராட்சிகளில் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொள்ளப்படும். முறைகேடாக எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பது விசாரணை முடிவில் தெரியவரும்’ என்றனா்.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,019 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

30 ஆண்டு கோரிக்கை! கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் திறப்பு!

கூஃபிஜென்னை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்..! 1 கோடி பார்வைகளைக் கடந்த நடன விடியோ!

பிப். 15-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

இதுபோன்ற விடியோக்களை வெளியிடுவது முதல்முறை! கிரண் ரிஜிஜு ராஜிநாமா செய்ய வேண்டும்!

SCROLL FOR NEXT