முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்

Updated On : 13 ஏப்ரல் 2026, 2:02 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் தொகுதிக்கு உட்பட்ட பரவை சந்தைப் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூா் மாவட்டம் மணலி எம்கே நகா் பகுதியை சோ்ந்த பாலமுருகன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அவரிடம், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,94,280 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement