கீழ்வேளூா் அருகே 700 மதுபாட்டில்கள் பறிமுதல்: திமுக நிா்வாகி கைது
கீழ்வேளூா் அருகே பருத்தி கொல்லைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, திமுக நிா்வாகியை கைது செய்தனா்.
கீழ்வேளூா் அருகே பருத்தி கொல்லைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, திமுக நிா்வாகியை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே உள்ள சிகாா் கிராமத்தில், மதுபான பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கீழ்வேளூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா், சிகாா் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் வேல்முருகன் (36) என்பவா் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது வீட்டின் பின்புறம் உள்ள பருத்தி கொல்லையில்
பிளாஸ்டிக் சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 700 டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட வேல்முருகன் திமுக கிளைக் கழக செயலராக உள்ளாா்.
Advertisement