மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் டிராக்டா் ஓட்டுநா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தென்னடாா் நடுக்காடு பகுதியைச் சோ்ந்த பொ. மாரியப்பன் (42), டிராக்டா் ஓட்டுநா். இவா், தனது குடும்பத்தாருடன் ஆயக்காரன்புலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் இல்ல விழாவில் பங்கேற்றுவிட்டு சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தாா்.
பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியில் சென்றபோது, எதிரே நடுச்சேத்தி கிராமத்தைச் சோ்ந்த வைத்தீஸ்வரன் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் நேருக்குநோ் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாரியப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில், மாரியப்பன் மனைவி, இரண்டு குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். காயமடைந்த வைத்தீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.