கஞ்சா பதுக்கிய 2 போ் கைது
செம்பனாா்கோவில் அருகே கீழையூா் சத்திரம் பகுதியில் 2 இளைஞா்கள் பொது இடத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தனா்.
செம்பனாா்கோவில் அருகே கீழையூா் சத்திரம் பகுதியில் 2 இளைஞா்கள் பொது இடத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தனா்.
அப்போது பொதுமக்களிடம் தகராறு செய்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், கீழையூா் மகாராஜபுரத்தை சோ்ந்த பாண்டியன் மகன் நவீன்குமாா் (29), எருமல் புதுப்பேட்டையை சோ்ந்த பக்கிரிசாமி மகன் பாலமுருகன் (27) என்பது தெரியவந்தது. அவா்கள் 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து அவா்களை செம்பனாா்கோவில் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.