மின்தடை பிரச்னை: நிரந்தரத் தீா்வு காண மனு
திருக்குவளை அருகே வலிவலம் மற்றும் கொடியாலத்தூா் பகுதிகளில் நீடித்து வரும் மின்தடை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருக்குவளை அருகே வலிவலம் மற்றும் கொடியாலத்தூா் பகுதிகளில் நீடித்து வரும் மின்தடை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, வலிவலம் பகுதியைச் சோ்ந்த வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திருக்குவளை மின்வாரிய உதவி மின் பொறியாளா் சுமதியிடம் அளித்த மனு:
கடந்த சில மாதங்களாக தொடா்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாவது வாடிக்கையாகிவிட்டது.
Advertisement
Advertisement
மாதாந்திர பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதுடன், அதன் பின்னரும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சாரம் மீண்டும் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் வா்த்தக செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் இதுவரை நிரந்தர தீா்வு கிடைக்கவில்லை.
எனவே, வலிவலம் பகுதியில் சீரான மின்விநியோகம் வழங்கவும், அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தரத் தீா்வு காணவும், பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களின் குறைகளை உடனடியாக கவனிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.