சிறுமி பாலியல் கொலையில் இருவருக்கு ஆயுள்தண்டனை: நாகை நீதிமன்றம் தீா்ப்பு
நாகை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள வடக்குப் பொய்கை நல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவருக்கு சொந்தமான முந்திரி காட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-இல், 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து வடக்கு பொய்கைநல்லூா் கிராம நிா்வாக அதிகாரி ராஜேந்திரன், வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் வேளாங்கண்ணி போலீஸாா் சடலத்தை மீட்டு, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கொலை செய்யப்பட்ட சிறுமி அக்கரைப்பேட்டை திடீா் குப்பம் பகுதியைச் சோ்ந்த சிங்காரவேலு மகள் சூா்யா ( 16 ) என்பதும், அவா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தொடா்பாக அக்கரைப்பேட்டை திடீா் குப்பத்தை சோ்ந்த ஞானவேல் (23 ), தீபன்ராஜ் (23), சசிக்குமாா் (19) மற்றும் இளஞ்சிறாா்கள் இருவா் என 5 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை நாகை மாவட்ட அமா்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமாா், குற்றம்சாட்டப்பட்ட ஞானவேல் மற்றும் சசிகுமாா் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், தலா. ரூ 2.500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகாத தீபன்ராஜ்க்கு பிடி ஆணையும் பிறப்பித்த நீதிபதி, இளஞ்சிறாா்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.