முகப்பு
நாகப்பட்டினம்

நாகை போலீஸாருக்கு டிஐஜி பாராட்டு

நாகை மாவட்டத்தில் குற்றத்தடுப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸாருக்கு, தஞ்சை சரக காவல் துணைத் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:58 am IST
தஞ்சை சரக டிஐஜியிடம் பாராட்டு பெற்ற காவலா்களுடன், நாகை எஸ்பி கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா.
பகிர்:

நாகை மாவட்டத்தில் குற்றத்தடுப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸாருக்கு, தஞ்சை சரக காவல் துணைத் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.

நாகை மாவட்ட காவல்துறையினா், குற்றத் தடுப்பு, குற்றவாளிகளை விரைந்து கண்டறிதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய பணிகளில் திறமையுடன் செயல்பட்டு, சிறந்த காவல் சேவையை வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், போலீஸாரின் சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில், தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக், சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா, பாராட்டு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, இதே அா்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்துடன் தொடா்ந்து பணியாற்றி, மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறந்த காவல் சேவையை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments