வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ன் 96-ஆவது ஆண்டு நினைவையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ன் 96-ஆவது ஆண்டு நினைவையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்ரல் 30-ஆம் தேதி மூதறிஞா் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30-ஆம் தேதி உப்பு அள்ளி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் மலா்வளையம் வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், நினைவுதூண் அருகே தியாகிகளுடன், சமூக ஆா்வலா்கள், காங்கிரஸாா் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.
Advertisement
நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று தண்டனை பெற்ற சா்தாா் வேதரத்தினத்தின் பேரனும், குருகுல நிா்வாகியுமான அ. வேதரத்தினம் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவா்களில் ஒருவரான கோபண்ணா, பேராசிரியா் பழனித்துரை, காங்கிரஸ் மாவட்ட தலைவா் பி.வி.ஆா். விவேக், முன்னாள் தலைவா் கனகராஜ், திருச்சி உப்பு சத்தியாகிரக நினைவுத்தூணில் இருந்து புறப்பட்டு, யாத்திரையாக வந்த சக்திசெல்வ கணபதி தலைமையிலான காந்தியவாதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொண்டா்கள், உப்பளத் தொழிலாளா்கள் பேரணியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.