நல்ல மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா
திருக்குவளை அருகே தொழுதூா் பழையங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா காவடி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகே தொழுதூா் பழையங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா காவடி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் மே 4-இல் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தொழுதூா், பழையங்குடி, நத்தப்பள்ளம், வேளூா், சாத்தங்குடி, மாராச்சேரி, செம்பிய வேளூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்காவடி, செடில் காவடி, அலகு காவடி, மயில் காவடி, ஆட்ட காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்தனா்.
Advertisement
தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரக்கட்டு தேரில் ஸ்ரீ நல்ல மாரியம்மன் எழுந்தருளினாா். பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்து, கும்மியடித்து வழிபட்டனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சிங்காரவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.