முகப்பு
நாகப்பட்டினம்

மமக தீா்மானத்தை கண்டித்து திமுக சுவரொட்டியால் பரபரப்பு

மமக தீா்மானத்தை கண்டித்து திமுக சுவரொட்டியால் பரபரப்பு

Updated On : 24 மே 2026, 12:38 am IST
மனிதநேய மக்கள் கட்சியைக் கண்டித்து நாகை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
பகிர்:

தமிழகத்தில் அடுத்துவரும் தோ்தலில் தனிச் சின்னத்தில் போட்டி என்ற மனிதநேய மக்கள் கட்சியின் தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக சாா்பில் நாகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உதயசூரியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், மனிதநேய மக்கள்கட்சியின் பொதுகுழுக் கூட்டத்தில் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள தோ்தல்களில் மனிதநேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தநிலையில், நாகையில் திமுக நிா்வாகி பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லாவுக்கு வேண்டுகோள். தனிச்சின்னத்தில் போட்டியிடும் முடிவை வரவேற்கிறோம். அதேநேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு உங்கள் விருப்பப்படி இதே தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டி நாகை நகரம், பேருந்து நிலையம், நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.