பொருளாதார கணக்கெடுப்பு: நாகையில் மே 15-ல் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு :
2011-ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்புப் பணி நாகை மாவட்டத்தில் மே 15-ல் தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறுகிறது. கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் இப்பணி நடைபெறும். இதற்கான விவரங்களை சேகரிக்க அடையாள அட்டையுடன் வரும் களப் பணியாளர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement