திருவாரூர்

திருவாரூரில் நாளை விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம்

DIN

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டத்துக்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெறவுள்ளது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் தொடங்குகிறது. இதற்காக விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சுவாமிகள் தங்களுக்கான தேரில் எழுந்தருளியுள்ளனர். தொடர்ந்து, திங்கள்கிழமை நடைபெறும் ஆழித் தேரோட்டத்துடன், அம்மன் தேர், சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை ஆழித்தேர் உள்ளிட்ட 5 தேர்களும் நிலையடிக்கு வருகிறது.
தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT