முகப்பு
திருவாரூர்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை, மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:34 am IST
பகிர்:

மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை, மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மன்னார்குடி அருகேயுள்ள மகாதேவப்பட்டணம் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோஸ் (45). இவரது மனைவி ஜர்வா (39). ஜர்வாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பிரச்னை ஏற்பட்டதையடுத்து, ஜர்வாவை கணவர் ஜோஸ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். 
காயமடைந்த ஜர்வா, சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய ஜோஸ்சை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.