காவலர் வாகனத்தை வழி மறித்தவர் கைது
முத்துப்பேட்டை அருகே காவலர் வாகனத்தை வழி மறித்து, தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை அருகே காவலர் வாகனத்தை வழி மறித்து, தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூரிலிருந்து முத்துப்பேட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆயுதப்படை காவலர் வாகனம் வந்துகொண்டிருந்தது. அப்பிரிவில் பணியாற்றும் செந்தில்வேலன் வாகனத்தை ஓட்டிவந்தார். முத்துப்பேட்டை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் வரும்போது, தில்லைவிளாகம் தெற்குக் காட்டைச் சேர்ந்த மணிகண்டன்(30) என்பவர் மது போதையில், காவலர் வாகனத்தை வழிமறித்து தகராறு செய்தாராம். இதுகுறித்து, காவலர் வாகனத்தை ஓட்டிவந்த செந்தில்வேலன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.