பேருந்து மோதி பெண் சாவு
திருத்துறைப்பூண்டியில் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டியில் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி பகுதி பாமணி சொக்கநாதர் தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் மனைவி பத்மா (65). இவர், வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்வதற்காக ரயில்வே கேட் அருகே திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பத்மா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பத்மாவை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மா உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.