ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில், லட்சுமி குபேரருக்கு குபேர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மஞ்சள், பால், திரவியம், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, லட்சுமி பூஜை நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரம், அர்ச்சனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.