திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (நவ.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறியது:
கஜா புயல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. தவிர, நிவாரண முகாம்கள் செயல்படும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்