திருவாரூர்

பிளஸ் 2 பொதுத் தேர்வு: அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

DIN


பிளஸ் 2 பொதுத் தேர்வில் நன்னிலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட நிகழ்வாண்டு அதிகரித்துள்ளது. 
நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்வாண்டு தேர்வு எழுதிய மாணவியரில், 97 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேர்ச்சி வீதம் 94 சதவீதமாகவும், பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி வீதம் 91 சதவீதமாகவும், ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேர்ச்சி வீதம் 90 சதவீதமாகவும், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி வீதம் 87 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இதுதவிர நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, நெடுங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலா 83 சதவீத மாணவர்களும், அச்சுதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 71 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  
 முற்றிலும் கிராமப்புற பின்னணியைக் கொண்ட நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ர.தரணிதேவி 600 மதிப்பெண்களுக்கு 540 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT